என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலை மோசடி வழக்கு"
சென்னை:
செங்குன்றம் புள்ளி லைனைச்சேர்ந்த கலைவாணன், கமலக்கண்ணன், பிரபாகரன், சண்முகம், ராஜேஷ், கலைமணி, தில்லைநகர் தெரு திருவாகர் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நாங்கள் சிறுவயது முதலே நண்பர்கள். நாங்கள் அனைவரும் அரசு வேலையில் சேர முயற்சி செய்து வந்தோம். அப்போது சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்.
அவரது மாமா ரெயில்வேயில் பெரிய பதவியில் இருப்பதாகவும் அவர் மூலம் பலருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தந்து இருப்பதாகவும், எங்களுக்கும் அதுபோல் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அவரது மனைவி மீனா, மகள் நந்தினியும் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் ரெயில்வே வேலைக்காக நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும், வாகனங்களை விற்றும் தலா ஒருவருக்கு ரூ.2 ½ லட்சம் வீதம் 7 பேரும் சேர்ந்து ரூ.17 ½ லட்சம் பணத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மீனா, நந்தினி முன்னிலையில் பிரபாகரனிடம் கொடுத்தோம்.
ஆனால் அதன்பிறகு எங்களுக்கு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். பணத்தையும் திரும்பி தராமல் சாக்கு போக்கு கூறி வந்தனர். அதன்பிறகு எங்களுடைய போனையும் இவர்கள் எடுப்பதில்லை.
நேரில் சென்று கேட்ட போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். லோக்கல் போலீசில் செல்வாக்கு இருப்பதாகவும் மிரட்டினார்கள். எனவே அவரிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Cheating
திண்டுக்கல்:
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆண்டியப்ப பிள்ளை தெருவைச் சேர்ந்த லாரி டிரான்ஸ்போர்ட்டு நடத்தும் செந்தில்குமார் (54), உலுப்பகுடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (48), ஆகியோர் தங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருமாறு அணுகியுள்ளனர்.
ரவிச்சந்திரனும் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக், டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர், ஆய்வக உதவியாளர் ஆகிய வேலைகளை வாங்கித் தர முடியும் என கூறியுள்ளார்.
அதன் பேரில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி கடந்த 2015-ம் ஆண்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த 11 பேரிடம் இருந்து ரூ4½ லட்சம் முதல் ரூ. 5½ லட்சம் வரை வசூலித்து ரூ.63 லட்சம் பணத்தை கொடுத்தனர். ஆனால்சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை. தங்களை மோசடி செய்ததை உணர்ந்த அவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தந்தை கோபாலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்